• May 04 2024

வீக் எண்ட் ஆகிவிட்டால் போதும்.. ராஷ்மிகாவால் இதை செய்யாமல் இருக்க முடியாதாம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கிய முதல் படம் ‘புதியபாதை’ என்பதும் இந்த படம் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது பலர் அறிந்ததே.

பார்த்திபன் ஜோடியாக சீதா இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்பதும் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருமணம் ஆகி ஒரு சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் தற்போது 33 ஆண்டுகள் கழித்து ‘புதியபாதை’ படத்தை ரீமேக் செய்யப் போவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த ரீமேக் படத்தில் நானே நடிக்கப் போகிறேன் என்று அவர் கூறியிருக்கும் நிலையில் விவாகரத்து ஆன சீதா மீண்டும் இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



‘புதியபாதை’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அப்படியே மீண்டும் படமாக்க போவதாக பார்த்திபன் கூறியுள்ள நிலையில் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்போது இருந்த வயதிற்கும் இப்போது உள்ள வயதிற்கும் 33 வயது அதிகமாக உள்ள பார்த்திபன் எப்படி அதே கேரக்டரில் நடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சீதாவின் கேரக்டரில் அவர் நடிப்பாரா அல்லது அவருக்கு பதில் வேற யாரையாவது நடிக்க வைப்பாரா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

இந்த படத்தின் சீதாவை நடிக்க வைக்க பார்த்திபன் தனது மகள் மூலம் தூது அனுப்புவார் என்று கூறப்பட்டாலும் அதற்கு சீதா ஒப்புக்கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குரியாக உள்ளது. இருப்பினும் பார்த்திபன் எதையாவது வித்தியாசமாக செய்யும் இயக்குனர் என்பதால் ‘புதியபாதை’ படத்தின் ரீமேக்கிலும் கண்டிப்பாக எதையாவது இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு வித்தியாசமாக படம் ஆக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement