• May 05 2024

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தை கலாய்த்த பார்த்தீபன்- எதை எப்படி சொல்லனும் என்ற விவஸ்தையே இல்லையாப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!


இன்றைய தினம் பிரமாண்டமாக அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிய இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரை் நடித்திருக்கின்றனர்.

அத்தோடு கடந்த 15 நாட்களுக்கு மேலாக ப்க்குழுவினர் தீவிரமாக ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பார்த்தீபன் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறியதாவது 


"நானே வருவேன் என்று சொல்லி அடம்பிடித்துதான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். என்னை இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்த போது முதலில் நான் வரவில்லை, தஞ்சாவூர் போறேன், அங்கு படத்தை பார்த்துவிட்டு, பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதையை செலுத்த உள்ளேன். 

அதனால் என்னால் வர முடியாது என்று சொன்னேன். ஆனால் இந்த மேடையை தவற விட்டுவிட கூடாது என்பதற்காக அடம்பிடித்து நானே வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ஏன்னா இந்த மாதிரியான பிரம்மாண்ட மேடை இன்னும் எத்தனை படத்திற்கு பார்க்க போறேன்னு தெரியல. 

நம்ம காதலியை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. அந்த மாதிரி இவ்வளவு நாளா நாம காதலித்த படம் நாளைக்கு ரசிகர்கள் கிட்ட போகும் போது, சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் வருத்தமாக இருக்கு" என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement