• May 19 2024

சிங்கம்-2 வைப் போன்று உருவாக இருக்கும் சூர்யாவின் மற்றொரு படத்தின் பாகம்-2…மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றுவரை பெண் ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சூர்யாவை போன்று கணவன் வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள் ஏராளம். 'நேருக்கு நேர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு பல படங்களில் நடித்து வருகின்ற இவர் பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் '24' என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டைம் டிராவல் கதைக்களத்தை மையமாக கொண்டு அமைந்திருந்த இந்தப் படமானது வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பலத்த வரவேற்பை பெற்றிருந்தமை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்திருந்தது. இதுவரை காலமும் சூர்யா நடித்த படங்களிலே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட இப்படத்தில் சூர்யா நடித்த ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் பெரியளவிலான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் விக்ரம் குமார் "24 படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முயற்சி செய்கின்றேன்" எனக் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் "இப்படம் முழுக்க முழுக்க ஆத்ரேயா கதையை மையமாகக் கொண்டு தான் அமைந்திருக்கும், விரைவில் நல்ல முடிவு வரும்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது ஆத்ரேயா கதாபாத்திரம் ஏற்கெனவே ரசிகர்களுக்கு அதிகளவு பிடித்திருந்தமையால் மிகுந்த எதிர்பார்ப்போடும் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement