• Jul 10 2025

கதிருக்கு ஏற்பட்ட சிக்கல்.. ராஜி அதிர்ச்சி.. தங்கமயில் சதியால் மீனாவை தவறாக நினைக்கும் சரவணன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கோமதி கிச்சனை ஆக்கிரமித்து கொண்டு ‘என் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தான் தெரியும், எனவே நீ எனக்கு சமையலுக்கு உதவி மட்டும் செய்தால் போதும், என்று தங்கமயில் இடம் கோமதி ஸ்ட்ரிக்டாக கூற, தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் மீனா மற்றும் ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள், அப்போது ராஜி - கதிர் ஆகிய இருவருக்கும் உள்ள லவ் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அடுத்து கதிருக்கு போன் செய்யும் ராஜி, ’நைட்டு லேட்டாக வந்தால் கதவை தட்ட வேண்டாம், எனக்கு கால் செய்தால் போதும், நான் கதவை திறந்து விடுகிறேன்’ என்று கூறுகிறார். அதே போல் கதிர் லேட்டாக வர அந்த நேரத்தில் பாண்டியன் விழித்து அவரை திட்டுவதற்காக செல்கிறார். அப்போது கோமதி அவரை தடுத்து படுக்க வைக்கிறார்.

 இந்த நிலையில் ராஜிக்கு கதிர் ஒரு பரிசு கொடுக்கிறார், அவர் கொடுத்த பேனா பரிசை ஆச்சரியமாக பார்க்கும் ராஜி, ‘பேனா பரிசாக கொடுத்தால் உறவு முறிக்கும் முறியும் என்று சொல்வார்கள் கூறியபோது, ‘அப்படி முறிந்தால் முறியட்டும் என்று கதிர் கூறுவதை அடுத்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.



அதன் பின்னர் திடீரென கதிரின் நண்பர் போன் செய்து தனக்கு பைக் வேண்டும் என்று சொல்ல கதிர் மற்றும் ராஜி ஆகிய இருவருமே அதிர்ச்சி அடைகின்றனர். புதிய பைக் வாங்குவது குறித்து இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கதிருக்கு பைக் வாங்க ராஜி உதவி செய்வார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் தங்கள் அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது அத்தை தன்னை சமைக்க விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் என்று கூற, சந்தடி சாக்கில் மீனா தன்னை அவமதித்ததாகவும் கூறுகிறார். ’நான் சம்பாதிக்கிறேன், நான் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொண்டு வருவேன், உங்களுக்கு என்ன? என்று மீனா சொல்லியதாக சரவணன் இடம் கோர்த்து விட சரவணன், மீனா அப்படியா சொல்லுச்சு என்று சிறிது கவலையுடன் கேட்கும் காட்சி உடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement