• May 13 2024

"ஓய் நம்பி உம்மை மட்டும் பிளாக் செய்ய முடியவில்லை நீ சரியான தொல்லையப்பா- பிரபல நடிகரை கிண்டல் செய்த கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


இதனிடையே கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வரும் படக்குழு இன்று ஜெயராம் நடிக்கும் 'ஆழ்வார்க்கடியான் நம்பி' கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டது. பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இந்த போஸ்டரை கார்த்தி தனது டுவிட்டர் பக்க்கத்தில் பகிர்ந்து, "ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை… சரியான தொல்லையப்பா." என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம்  'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியை ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் நம்பி' கதாபாத்திரம் தொடர்ச்சியாக தொல்லை செய்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது என தெரிகிறது. அத்தோடு இந்த டுவிட்டை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement