• May 18 2024

உன்னைப்போல் அன்பானவள் உயிருடன் இல்லை,- அருவி சீரியல் படப்பிடிப்பில் நடந்த சோகம்- கதாநாயகி போட்ட முக்கிய பதிவு

stella / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் அருவி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.இந்த சீரியலில் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இதில், ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி ரோசரி, டேவிட் சாலமன் ராஜா, மீனா செல்லமுத்து, சுமங்கலி மற்றும் ஸ்ரீ வித்யா சங்கர் என ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.அருவி சீரியலின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்த கொண்டு இருந்த போது ஒப்பனைப் பெண் ராமாபிரபாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 


இரவில் இருந்தே அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், காலையில் அருவி சீரியலின் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். படப்பிடிப்பின் போது மூச்சு திணறல் அதிகரித்ததால், மருத்துவமனைக்கு சென்ற சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். பட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமாபிரபாவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

 குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு இருந்ததால், மகனை சித்தி வளர்த்து வர, இவர் சென்னையில் தங்கிவேலை பார்த்து வந்துள்ளார்.மேக்கப் பெண் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கு அருவி சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளிடம் போலீசார் விசாணை நடத்தினர். மேலும், இது தற்கொலையா? இல்லை மரணமா? என்ற பல கோணத்தில் விசாணை நடத்தினர்.


இதையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ராமாபிரபாவின் உடல் பட்டுக்கோட்டை கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது  இந்நிலையில், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவிற்கு மேக்கப் பெண்ணாக இருந்த ராமாபிரபா திடீரென உயிரிழந்தது குறித்த அவர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், உன்னைப்போல் அன்பானவள் உயிருடன் இல்லை என்பதை தன்னால் ஜீரணிக்க முடிவில்லை என்றும், சாப்பிடியா என்று இனி என்னை யார் கேட்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement