நடிகர் நிதின் சத்யா தான் நூலிழையில் விபத்தில் இருந்து உயிர் தப்பியதாக தெரிவித்து இருக்கிறார்.
நேற்று சென்னையில் இரவு மிக கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் அதிகம் தேங்கி இருந்தது.
மிக குறைந்த நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் உயரமாக நீர் தேங்கியதால் வாகனங்களும் செல்ல முடியாமல் நகரமே பல இடங்களில் ஸ்தம்பித்தது என்று தான் கூற வேண்டும்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் நிதின் சத்யாவும் சிக்கிக் கொண்டாராம்.
அவர் சென்னை Samco RKFI junctionல் இருந்தபோது ஒரு மரம் சாய்ந்திருக்கிறது.மேலும் அதில் இருந்து அவர் நூலிலையில் தப்பி இருக்கிறார்.
மேலும் இது பற்றி அவரே ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மழை நேரத்தில் மரத்தின் அடியில் நிற்பது ஆபத்தானது என மக்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
Listen News!