• Apr 27 2024

மகன் ‘மீர்’ இடம் ஓகே பெற்று கதை விவாதத்தை ஆரம்பித்த அட்லி.. வைரல் வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் அட்லி தனது மகனிடம் ஓகே பெற்று அதன் பிறகு கதை விவாதத்தை தொடங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ராஜா ராணிஎன்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதன் பின்னர் விஜய் நடித்ததெறி’ ’மெர்சல்மற்றும்பிகில்ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கினார். இதனை அடுத்து ஷாருக்கான் நடித்தஜவான்என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் கதை விவாதத்தை தனது உதவியாளர்களுடன் தொடங்கிய நிலையில் கதை விவாதத்தில் அவரது மனைவி பிரியா மற்றும் மகன் மீர் ஆகியவர்களும் கலந்து கொண்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில்மொத்தமா நாம யோசிச்சோம்னா பெட்டர் ஆக இருக்கும்என்று தனது உதவியாளர்களிடம் கூறிய அட்லி அதன் பிறகுமீர் ஓகேவாஎன்று கேட்க அவரது மகன்ஓகேசொல்ல அதன் பிறகு தான் அவர் கதை விவாதத்தை தொடங்கியதாக தெரிகிறது.

அட்லியின் ஆறாவது படமாக உருவாக இருக்கும் அல்லு அர்ஜுன் படத்தின் கதை விவாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு மாதங்கள் இந்த விவாதம் நடைபெறும் என்றும் அதன் பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தொடர்ச்சியாக ஐந்து வெற்றி படங்களை கொடுத்துள்ள அட்லி, ஆறாவது படத்தையும் வெற்றி படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement