• May 05 2024

மக்க கலங்குதப்பா பாடலைப் பாடிய பாடகருக்கு விருது வழங்கிய நித்தியானந்தா- இப்படி ஒரு முறையிலும் வழங்கலாமா?- வெளியாகிய புதிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்து கலைஞர்கள் சமீபகாலமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கிராமிய மற்றும் கானாப்பாடகராக வலம் வருபவர் தான் மதிச்சியம் பாலா.

இவர் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் இடம் பெற்ற மக்க கலங்குதப்பா மற்றும் லவ்டுடே படத்தில் இடம் பெற்ற சிலுக்குச்சிப்பா ஊஞ்சல் ஆடுது எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.


இந்த நிலையில் கைலாசாவில் இருக்கும் நித்தியானந்தா சுவாமி இவரின் சமூக பணியை பாராட்டி கைலாசா சரஸ்வதி விருதினை அளித்துள்ளார். இதனை நித்யானத்தா ஷும் மீட்டிங் ஊடாக வழங்கி கௌரவித்துள்ளார். இதனால் மதிச்சியம் பாலா மகிழ்ச்சியடைந்துள்ளார்.


அத்தோடு தனக்கு விருது கிடைத்ததை முன்னிட்டு மதிச்சியம் பாலா கைலாசாவில் இருக்கும் நித்தியானந்தாவுக்கு தனது நெஞ்சா்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement