• May 07 2024

குடிகாரக் கணவனால் கண் கலங்கிய பெண்... பிள்ளைகளுக்காக அனுபவிக்கும் கஷ்டம்... மனதை உருக வைத்த 'நீயா நானா' ப்ரோமோ வீடியோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். அதிலும் குறிப்பாக 'நீயா நானா' நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிகழ்ச்சியானது10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. 

மேலும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத் பிரமாதமாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்றன. 


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இதில் "வீட்டில் சமையல் வேலை செய்பவர்கள்", "சமையல் வேலைக்கு பணி அமர்த்தியவர்கள்" என்ற தலைப்பின் கீழ் விவாதம் இடம்பெறுகின்றது.

அதில் கோபிநாத் எதற்காக சமையல் வேலைக்கு போனீங்க எனக் கேட்கின்றார். அதற்கு பெண் ஒருவர் "வீட்டுக் கஷ்டத்தினால் சமையல் வேலைக்கு போய் இருக்கோம்" எனக் கூறி கண் கலங்குகின்றார். மற்றோரு பெண் "எங்க அப்பா புள்ளா குடி சார், பிறந்தது வளர்ந்ததிலிருந்து சம்பாதிச்சு பிள்ளைங்களுக்கு ஒரு பூ வாங்கிக் கூடக் குடித்திருக்க மாட்டார் சார்" எனக் கூறி அவரும் கண் கலங்குகின்றார். 


அதேபோல் இன்னொரு பெண் "என் கஸ்பென்ட் எங்க கூட இல்லை, என் பிள்ளைகளை வளர்க்கிறதற்காக நான் வேலைக்கு போறேன்" எனக் கூறுகின்றார். மேலும் ஒரு பெண் "என் கணவர் ரொம்ப நல்லா குடிப்பாங்க, என் பசங்க முதல்ல சாப்பிடணும் என்பதற்காக தான் நான் போனேன் சார்" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறிய கருத்தானது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement