• Jul 27 2024

இந்த முறை ஜெயிச்சே ஆகணும்.. தனுஷ் இயக்குனருடன் கைகோர்த்து சபதமிட்ட நயன்தாரா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


 லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள நடிகை நயன்தாராவின் சமீப கால படங்கள் தோல்வி அடைந்து வருவதை அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தான் சினிமா உலகத்தை விட்டு விலகுவேன் என்று அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2009ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால் ‘ஐரா’, ‘மிஸ்டர் லோக்கல்’ ’கொலையுதிர் காலம்’  ’நிழல்’ ’நெற்றிக்கண்’ ’அண்ணாத்த’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ 'O2’ ‘கோல்டு’ ’கனெக்ட்’ ’இறைவன்’ ’அன்னபூரணி’ என  வரிசையாக ஏராளமான தோல்வி படங்களை நயன்தாரா கொடுத்துள்ளதால்  அவருக்கு மார்க்கெட் தற்போது குறைந்துள்ளது.
 
தற்போது அவர் ’தி டெஸ்ட்’ உள்பட இரண்டு படங்களில் நடித்து வந்தாலும் அந்த படங்களும் பெரும் எதிர்பார்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில்  விரைவில் திரை உலகத்தை விட்டு விலக போகும் நயன்தாரா  அதற்கு  முன் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டு தான் செல்வேன் என்று  உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் நயன்தாராவின் 81 வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக தெரிகிறது.  இந்த படம் ஒரு இளம் பெண்ணுக்கும் ஒரு யானைக்கும் உள்ள  பாசப்பிணைப்பு என்றும் இதுவரை நடித்திராத ஒரு கேரக்டர் என்பதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று நயன்தாரா நம்புவதாகவும் கூறப்படுகிறது

இயக்குனர் துரை செந்தில்குமார் ஏற்கனவே தனுஷ் நடித்த ’கொடி’ சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது அவர் சூரியின் ‘கருடன்’ படத்தை இயக்கி வரும் நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தையும் அவர்தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

Advertisement

Advertisement