• Sep 21 2023

டப்பிங் ரூமில் கண்ணீர் விட்டு அழும் 'எதிர்நீச்சல்' நந்தினி... என்னாச்சு இவருக்கு... குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.


இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகின்றார். இவருக்கு நிறையவே ரசிகர் பட்டாளம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான்.


இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டப்பிங் ரூமில் இருந்து ஹரிப்ரியா கண் கலங்கி அழுகின்றார். அந்தவகையில் அவர் இப்பதிவின் மூலமாக நந்தினி கதாபாத்திரத்திற்கு தானே தான் சொந்தக் குரல் கொடுத்து வருவதாகவும் தெளிவு படுத்தியிருக்கின்றார்.


எனவே நந்தினி பாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement