• May 09 2024

அபிராமி வீட்டில் தீபாவை தேடும் நட்சத்திரா- ஐஸ்வர்யாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கார்த்திக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திரா தன் அப்பா அம்மாவுடன் அபிராமி வீட்டிற்கு வந்து தீபாவை தேட வீட்டை சுற்றி பார்ப்பதாக பொய் சொல்லி வீட்டை சுத்தி பார்க்க பூஜை ரூம் அழைத்துச் செல்ல அங்கு நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா குத்துவிளக்கு மணிமாலையை திருடுகிறாள்.

அடுத்து இன்னொரு ரூம் அழைத்துச் செல்ல அங்கு நட்சத்திராவின் டூப்ளிகேட் அப்பா வாட்ச், மோதிரம் போன்றவற்றை திருடுகிறார். கடைசியாக கார்த்திக் ரூமுக்குள்ளே செல்ல சத்தம் கேட்டு தீபா ஒளிந்து கொள்ள நட்சத்திரா பார்க்க அங்கு இரண்டு தட்டு இருக்கிறது.தட்டை பார்த்து கார்த்திக் சாப்பிட்டதா என்று கேட்க இல்லை இல்லை அவர் டைனிங் டேபிளில் தான் சாப்பிட்டார் எக்ஸ்ட்ரா பசிக்குதுன்னு சொன்னதுனால கொண்டு வந்து கொடுத்தேன் என்று சொல்ல நட்சத்திராவிற்கு கண்டிப்பாக தீபா இங்கு தான் இருப்பதாக யோசிக்கிறாள்.


அடுத்து கார்த்திக் தீபா வீட்டிற்கு வந்து தீபா தன் வீட்டில் இருப்பது தான் சிறந்தது என்று சொல்லி தீபாவின் துணிமணிகள் வாங்கிக் கொண்டு செல்ல அங்கு மைதிலி வருகிறாள். மைதிலி ஏன் எதற்கு என்று கேட்டு பேகை செக் பண்ண போக கடைசியாக ஒன்றுமில்லை என தெரிந்து கொண்டு கார்த்திக்கை அனுப்பி வைக்கிறாள்.

இந்த பக்கம் நட்சத்திரா அபிராமி வீட்டில் மயக்கம் போட்டு விழ கல்யாணம் தடைபட்டதால் கல்யாணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று விரதம் இருப்பதாக சொல்ல அபிராமி நீ தான் இந்த வீட்டு மருமகள் என்று சொல்லி பரம்பரை செயினை நட்சத்திரா கழுத்தில் போடுகிறாள்.பிறகு கார்த்திக் தீபாவின் டிரஸ்ஸ எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர ஐஸ்வர்யா என்ன துணி என்று பேக்கை ஓபன் செய்து பார்க்க உள்ளே பெண்ணின் துணிமணிகள் இருப்பதை பார்த்து யார் என்று கேட்க கார்த்திக் சமாளித்து விடுகிறான்.


அடுத்து உள்ளே வந்து தீபாவிடம் துணிமணியை கொடுக்க அபிராமி கார்த்திகை அழைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து நலுங்கு கயிறு வாங்கி கொண்டு வந்தேன் இது கையில் காட்டினால் எந்த ஆபத்தும் வராது என்று கையில் கட்டுகிறாள்.

இன்னொரு கயிறு இருக்க அதை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து கார்த்திக் உங்களுக்கும் திருமணமாக போவதால் உங்களுக்கும் ஆபத்து வரக்கூடாது என்று சொல்லி அந்த கயிற்றை கட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Advertisement

Advertisement

Advertisement