• May 02 2024

மீண்டும் இணையவுள்ள நாக சைதன்யா-சமந்தா... ஒரே புகைப்படத்தால் வெளியான உண்மை..? குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். சினிமா வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி பல தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றார்.


இவர் தெலுங்கில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2010-ஆம் ஆண்டு வெளியான 'Ye Maaya Chesave' என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது. 

இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். 


நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது நடிகர் நாக சைதன்யா, சமந்தாவின் செல்ல நாய்க்குட்டியுடன் ஜாலியாக காரில் ரைடு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த நாய்க்குட்டியானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தாவிடம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனவே இதன் மூலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளமை தெளிவாகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது இந்தத் தம்பதியினருக்கு தங்களது முற்கூட்டியே வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement