• May 04 2024

"உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் .."சிகிச்சை முடிந்து விஜய் ஆண்டனி போட்ட பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர், நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைத்தது.

இந்த படத்தை, சொல்லாமலே, பூ, போன்ற தரமான தமிழ் படங்களை இயக்கிய சசி இயக்கி இருந்தார். படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இப்படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. 


இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆன்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக ஆர் ஆம்புலன்ஸ் மூலம்  மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதன் பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அவரின் உடல் நலம் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,அன்பு இதயங்களே..நான் 90% குணம் அடைந்து விட்டேன்.உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement