சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்துவோட friend பொலீஸைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் உனக்கு நல்லது தானே என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து முதல்ல ஒரு மனுஷனுக்கு நல்ல பண்பு தான் முக்கியம் அது அவனிட்ட இல்ல பிறகு எப்புடி கல்யாணம் பண்ணி வைக்கிறது என்று கேக்கிறார். மேலும் பொலீஸ் வேலையில இருக்கிறன் என்று அப்பாவி மக்களிட்ட திமிரைக் காட்டுறது சரியில்ல என்கிறார்.
அதனை அடுத்து முத்துவோட friend நீ அப்புடியே சம்மதிக்காமல் இருந்தால் அவங்க ஒருநாள் ஓடிப் போயிடுவாங்க அப்ப உனக்கு கல்யாண செலவு மிச்சம் என்று நக்கலாகச் சொல்லுறார். அதைக் கேட்ட முத்து, friendக்கு அடிக்க கை ஓங்குறார். பின் முத்து எனக்கும் சீதா தங்கச்சி மாதிரித்தான் அவளுக்கு நல்ல வாழ்க்கையைப் பாத்து அமைச்சுக் கொடுக்க வேணும் என்கிறார்.
அதனைத் தொடர்ந்து சீதாவுக்கு தங்கமான மாப்பிள்ளையை கட்டிக் கொடுக்கணும் என்று சொல்லுறார். பின் முத்து காரில போகும்போது அருண் இடையில வந்து நிற்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கிறார்கள். பின் சீதா அங்க வந்து அருணை போகச்சொல்லிச் சொல்லுறார். அதைப் பார்த்த முத்து சீதா நீ என்ன பண்ணுற இங்க என்று கேக்கிறார்.
அதுக்கு சீதா hospital போக வந்தனான் என்று சொல்லுறார். பின் மீனாட அம்மா சீதா யாருகூடயும் கதைக்காமல் ஒரு மாதிரியாகவே திரியுறா என்று சொல்லுறார். அதுக்கு மீனா அம்மா நீ சீதாவை பற்றிக் கொஞ்சம் ஜோசிச்சுப் பார் என்கிறார். அதைக் கேட்ட மீனாவோட அம்மா எனக்கும் அவளைப் பார்க்க கவலையாத் தான் இருக்கு என்று சொல்லுறார்.
அதனை அடுத்து விஜயா பார்வதி வீட்ட போய் தனக்கு ரோகிணி வாங்கித்தந்த செயினைக் காட்டுறார். அதைப் பார்த்த பார்வதி இந்தச் செயினை யார் வாங்கிக் கொடுத்தாங்க என்று கேக்கிறார். அதுக்கு விஜயா அந்தப் பார்லர்காரி தான் இந்தச் செயினை வாங்கிக் கொடுத்தா என்கிறார். மேலும் எப்ப இந்த செயினை வாங்கிக் கொடுத்தாலோ அப்பவே நான் ரோகிணியை மன்னிக்க கூடாது என்று முடிவெடுத்திட்டேன் என்கிறார். பின் சிந்தாமணி பார்வதி கிட்ட வந்து தன்ர பிறந்தநாளுக்கு வரச்சொல்லிச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!