• Jan 26 2026

முதல் முறையாக மீனாவுக்கு அடித்த முத்து.. பணத்திற்காக லாயரிடம் சிக்கிய விஜயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொன்னதில் சீதா சந்தோஷப்படுகிறார். கல்யாணத்துக்கு முதலே இப்படி ஒரு பிரச்சனை என்றதும் ஓடிவிட்டான் என்று சொல்ல ,எனக்கு கிடைத்த புருஷன் மாதிரி தான் உனக்கும் கிடைக்க வேண்டும். என்ன  நடந்தாலும் கூடவே இருக்கணும் என்று மீனாவும் சொல்லுகின்றார். 

இதை தொடர்ந்து சத்யாவின் போலீஸ் கேசை முடிப்பதற்காக முத்து பணம் திரட்டுகின்றார். அதன்படி ஒரு இடத்தில் இரண்டு லட்சம் வாங்க, செல்வமும் தன்னிடம் இருந்த 25000 ரூபாவை கொடுக்கிறார்.

அதன் பின்பு சத்யாவின் அம்மா தம்மிடம் இருந்த நகைகள் எல்லாவற்றையும் வைத்துவிட்டு இறுதியாக மீனாவின் அப்பா ஞாபகமாக இருந்த மிஷினையும் விற்று விடுகின்றார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து அவர்களுக்கு பேசிவிட்டு அதை மீண்டும் வாங்கி எடுக்கின்றார்.


இதை அடுத்து வீடு கட்டுவதற்காக சேர்த்து வைத்த பணத்தையும் எடுத்து விடுகின்றார்கள். அந்த நேரத்தில் தான் பைக்கை விற்று விடவா என்று கேட்க, மீனாவுக்கு முத்து கையில் அடிக்கின்றார். 

இதை தொடர்ந்து அண்ணாமலையும் தன்னால் இயன்ற 35 ஆயிரம் ரூபாயை கொடுக்கிறார்.. அடுத்த நாள் முத்துவும் மீனாவும் லோயரிடம் இதில் நான்கு அரை லட்சம் ரூபாய் இருக்குது இத வச்சு எப்படியாவது கேஸை முடிச்சு கொடுங்க மீதி பணத்தை கொடுக்கின்றோம் என்று சொல்ல, அவரும் சரி என சொல்கின்றார்.

இறுதியாக விஜயா வீட்டுக்குச் சென்று சத்யாவை ஜெயிலில் அடைப்பதால் உங்களுக்கு என்ன லாபம், அவரை விட்டால் காசு தருகின்றோம் என்று சொல்லவும் இதனால் விஜயாவும் யோசிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement