• May 03 2024

தான் கர்ப்பமாக இருப்பதை கதிரிடம் மறைத்த முல்லை- மீனா கொடுத்த அட்வைஸ்ட்- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் சமீபகாலமாக பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லைக்கு தான் கர்ப்பமாக இருப்பது உண்மையா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கின்றார். இதனால் தான் சோதிக்கும் போது நடந்த விடயத்தை மீனாவிடம் கூறாமல் கதையை மாற்றி கூறுகின்றார். அப்போது மீனா கர்ப்பமாக இருப்பதை அறிய காலையில் எழுந்தவுடன் ஜுரின் எடுத்து சோதித்து பார்த்தால் நல்லது எனக் கூறுகின்றார்.

இதனால் முல்லை அப்போ இப்போ சோதித்து பார்த்தது உண்மையாக இருக்காது எனக் கருதி குழப்பத்தில் இருப்பதோடு மீண்டும் கடைக்குச் சென்று கர்ப்பமாக இருப்பதை செக் பண்ணும் பிரக்னன்ஸி கிட்ஃசை வாங்கி வருகின்றார். பின்னர் வீட்டில் மூர்த்தி இல்லாத காரணத்தால் எல்லோரும் ஜாலியாக இருக்கின்றனர்.


தனமும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற அதிர்ச்சியடைந்த கண்ணன் அண்ணா இல்லாதது எல்லோருக்கும் சந்தோசமா எனக் கேட்டு எல்லோரும் ஜாலியாகப் பேசிக் கொள்கின்றனர். தொடர்ந்து முல்லை கதிரின் அருகில் அமர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லலாமா வேண்டாமா எனத் தவிக்கிறார்.

பின்னர் மீனா சொன்னதை நினைத்து இப்போ சொல்லி ஆசையை வளர்க்க வேண்டாம். திரும்ப ஒருமுறை செக் பண்ணிப் பார்த்திட்டு சொல்லலாம் என்று யோசிக்க கதிர் ,முல்லை ஏன் இப்படி இருக்கிறார் என்ற குழப்பத்தில் இருக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement