• May 13 2024

மாணவர்களுடன் களத்தில் இறங்கி மாஸ் காட்டும் அமைச்சர் ரோஜா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட் & வாலிபால் ஆடிய புகைப்படங்கள்  தற்போது வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கி  வந்தவர் நடிகை ரோஜா.இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.மேலும் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அத்தோடு  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.


ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில்  நடைபெற்ற ஜெகன்னா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட், வாலிபால் விளையாடினார். இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார். அத்தோடு  சித்தூர் மக்களவை உறுப்பினர் ரெட்டிப்பாவும் கலந்து கொண்டார்.


சில நாட்களுக்கு முன்பு, ரோஜா அறக்கட்டளையின் கீழ், தனது சொந்த தொகுதியான நகரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளையும் எம்எல்ஏ ரோஜா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.அத்தோடு  வடமலைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது சகோதரர் ராம்பிரசாத்துடன் கைப்பந்து போட்டிகளையும் ரோஜா துவங்கி வைத்தார்.


Advertisement

Advertisement

Advertisement