• May 04 2024

எனக்கு பணம் கிடைக்காதா என்று கேட்ட மேகன், வெளியாகும் ஹரியின் மனைவியின் சுயரூபம்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இளவரசர் ஹரியின் மனைவி மேகனைக் குறித்த எதிர்மறையான பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.ராஜகுடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தனக்கு பணம் கிடைக்காதா என்று கேட்டுள்ளார் மேகன்.பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கில் இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் கண்ணீர் வடித்த விடயம் கூட விமர்சனத்துக்குள்ளானது.இந்நிலையில், மேகனைக் குறித்த விமர்சனம் உண்மைதானோ என எண்ணும் வகையில் அவரைக் குறித்த செய்திகள் பல வெளியாகியுள்ளன.

உதாரணமாக, 2018ஆம் ஆண்டு, ஹரி மேகன் தம்பதியர் அரசு முறைப்பயணமாக, அல்லது ராஜகுடும்ப கடமைகளின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்கள்.அப்போது வெளியான புகைப்படங்களில் புன்னகை பூக்க பொதுமக்களுடன் மேகன் கைகுலுக்கும் புகைப்படங்கள் வெளியாகின. எல்லா ராஜகுடும்ப பெண்களைப்போலவும், புதிதாக ராஜகுடும்பத்துக்குள் வந்த மேகனும் மக்களுடன் பழகுவதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.ஆனால், வெளியே புன்னகை முகம் காட்டிய மேகனுடைய மனதில் உண்மையில் வேறொரு விடயம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.

ஆம், எனக்கு இதற்காக பணம் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், அல்லது எனக்கு இப்படி பொது நிகழ்ச்சிகளிலெல்லாம் கலந்துகொள்வதற்கு பணம் கிடைக்காது என்பதை என்னால் நம்பமுடியவில்லை என மேகன் முறுமுறுத்ததை அவரது உதவியாளர்கள் பலர் கேட்டிருக்கிறார்கள்.மேலும், உதவியாளர்களை மேகன் துன்புறுத்தினார் என்பதை, தொடர்ந்து ஹரி மேகன் தம்பதியர் மறுத்துவந்த நிலையில், ஒரு பெண்ணை மேகன் கடுமையாக நடத்தியதாகவும், அவர் இளவரசர் வில்லியமிடம் கண்ணீர் விட்டுக் கதறியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், மேகனுடைய உதவியாளரான ஒரு பெண் விடுப்பில் இருக்கும்போது, அவர் தன் குடும்பத்துடன் உணவருந்த வெளியே சென்றிருக்கும்போது, அவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை போன் செய்து தொந்தரவு செய்திருக்கிறார் மேகன். அந்த அழைப்புகள் பல நாட்களுக்குத் தொடர்ந்துள்ளன.இந்த தகவல்களையெல்லாம், Valentine Low என்பவர் தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளதைத் தொடர்ந்து, இந்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement