• May 03 2024

கணவர் இறப்பிற்கு பின் முதன் முதலில் அந்த விடயத்தை செய்த மீனா...வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கணவர் இறந்த சோகத்தில் இருந்து  வந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார்.


மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.இதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார்.அத்தோடு பல வருடங்களுக்குப் பின்னர் மீனா இந்த படத்தில் ரஜினி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களில் மீனா கமிட்டாகி உள்ளார்.


இதனிடையே மீனா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனாவின் மகளும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.மேலும் இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். எனினும் சமீபத்தில் தான் மீனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடு இருந்தார்.இதன் பின்னர் நடிகை மீனா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்று இருந்தார்.


இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீனா மனம் தேற்றி வருகிறார். எனினும் சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தது மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.மேலும்  இப்படி ஒரு நிலையில் கணவரின் இறப்பிற்கு பின்னர் மீனா முதன் முறையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement