• May 03 2024

மூர்த்தியிடம் தான் கர்ப்பமாக இருப்பதைச் சொன்ன தனம்- எப்புட்றான்னு கேட்க போகும் மீனா- இனி நடக்கப் போவது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில்  கர்ப்பமே அடைய முடியாது என்று சொல்லப்பட்ட முல்லை கர்ப்பம் ஆகிறாள். இதனால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். இதனையடுத்து ஐஸ்வர்யாவும் திடீரென கர்ப்பம் ஆகிறாள். கண்ணன் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறான். ஒரே நேரத்தில் இரண்டு பேர் கர்ப்பமாக இருப்பதால் வீட்டை எப்படி பார்த்துக்கொள்வது என யோசிக்கின்றனர்.

அதன்பின்னர் தனம் வீட்டிலே இருந்து முல்லை, ஐஸ்வர்யாவை பார்த்துக்கொள்வதாக சொல்கிறாள். மூத்தியும் கடையை நானும் ஜீவாவும் பார்த்துக்கிறோம். நீ ஹோட்டலை பார்த்துக்கோ என்கிறான். கதிரும் ஓகே செல்கிறான். தனமும் இனிமே நீயும் நானும் தான் இரண்டு பேரையும் பார்த்துக்கணும் என மீனாவிடம் கூறுகிறாள். இதனால் அவள் ஷாக்காகிறாள்.வீட்டில் வேலை எல்லாம் டபுள் ஆக மீனா சலிப்போடு எல்லா வேலையும் செய்கிறாள். அவளும் தனமும் சேர்ந்து ஐஸ்வர்யா, முல்லையை பார்த்து கொள்கின்றனர். இந்த நேரத்தில் திடீரென தனம் தொடர்ந்து வாந்தி எடுக்க என்னவென்று புரியாமல் குழம்புகிறாள். உடனே அவளுடைய அம்மாவை வர சொல்கிறாள்.


அதன்பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து டாக்டரை சென்று பார்க்கின்றனர். அவளை பரிசோதிக்கும் டாக்டர் நல்ல விஷயம் தான் எனக்கூறி தனம் கர்ப்பமாக இருப்பதை கூறுகிறார். இதனால் தனம் ஷாக்காகிறாள். இப்போதைக்கு வீட்ல யாருக்கிட்டயும் சொல்ல வேணாம். மொத நான் மாமாக்கிட்ட சொல்லிக்கிறேன் என தனது அம்மாவிடம் கூறிவிட்டு மூர்த்தியை சந்திக்க போகிறாள்.அவனைப்பார்த்து கோபத்துடன் பேசும் தனம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நமக்கு இரணடாவது குழந்தை பிறக்க போகுது என கூறுகிறாள். இதனைக்கேட்டு அவன் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் குதிக்கிறான். இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை என் சோகமா சொல்ற என கேட்கிறான். ஏற்கனவே வீட்ல ரெண்டு பேர் கர்ப்பமா இருக்காங்க. இந்த நேரத்துல எப்படி இந்த விஷயத்தை சொல்றது. கண்ணன் கேட்டா சிரிப்பான். ஐஸ்வர்யா கூட எனக்கும் குழந்தை பிறக்கும்.


மீனா மட்டும் இதை கேட்ட எப்புட்றான்னு கேப்பா என சொல்லி பயப்படுகிறாள். நீங்க என்ன பண்ணுவீங்க தெரியாது. நீங்கதான் இந்த விஷயத்தை வீட்ல சொல்லணும் என்கிறாள். அவன் நான் எப்படி சொல்றது என தயங்க, அதெல்லாம் தெரியாது. நீங்கதான் சொல்லணும் என தனம் கூறிவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுகிறாள். வீட்டுக்கு வரும் தனம் வித்தியாசமாக நடந்து கொள்வதை கவனித்து மீனா சந்தேகம் அடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement