• Apr 27 2024

'நல்ல வாழ்க்கைக்கு மயில்சாமி உதாரணம்' - திரைத்துறையினர், மக்கள் திரண்டு சென்று அஞ்சலி

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகரும் நல்ல மனம் கொண்ட மனிதருமான மயில்சாமியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இதனைத் தொடர்ந்து நடிகர்கள் மனோபாலா, அருண் விஜய், சார்லி, யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலை முதலே மயில்சாமிக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சற்று முன் மயில்சாமியின் உடலை குடும்பத்தினரிடம் ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்து இருக்கின்றது. மயில்சாமியின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இறுதி அஞ்சலி நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதனையடுத்து மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் செந்தில் தனது உணர்வுபூர்வமான இரங்கலினையும் தெரிவித்துள்ளார். அதாவது "மயில்சாமி அவர்கள் நல்ல நடிகர். நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு எதார்த்தமான நடிகர். எல்லார் கூடவும் நன்றாகப் பழகுவார். என் கூட நடிக்கும் போது நன்றாக நடிக்கின்றாய் எனக் கூறியிருக்காரு. நன்றாக உற்சாகப்படுத்துவாரு. இரவு கூடப் பேசினேன் ஆனால் இன்னைக்கு அவன் இறந்திட்டான்" என அழுதவாறு கூறியுள்ளார்.


இவரைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் கூறுகையில் "ஒரு மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்பதற்கு மயில்சாமி தான் உதாரணம். தான் மட்டுமன்றி உடனிருந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தவர் நடிகர் மயில்சாமி. மயில்சாமியின் பிள்ளைகள் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement