• May 19 2024

சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திலிருந்து கிடைத்த மாஸ் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கக் கூடிய முக்கிய இயக்குநர் தான் பாலா. இவர் அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்ததை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இருப்பினும் தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் முதற் கட்டபடப்பிடிப்பானது கன்னியாகுமரியில் நடந்தது.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜூன் 7 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை சம்மந்தமான காட்சிகளை சென்னையிலேயே எடுத்துவிட்டு, அடுத்து கோவாவுக்கு புறப்பட உள்ளார்களாம். இதனால் இப் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement