• May 04 2024

பல நண்பர்கள் குடும்பமாகிட்டாங்க தலை வணங்குகின்றேன்- சீதா ராமம் நாயகன் போட்ட டுவிட்- விஷயம் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இதையடுத்து இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர். இதை தனிப்பட்ட வெற்றியைப் போல் உணர்கிறேன். மேலும், படக்குழுவிற்கு தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் இப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே 80 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் மூலம் எந்தவொரு தமிழ் படமும் செய்யாத வரலாற்று சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது





Advertisement

Advertisement

Advertisement