• May 18 2024

வீட்டுக்குள்ளேயே பனைமரம் வளர்க்கும் மன்சூர் அலிகான்-பாத்ரூமை கூட விட்டு வைக்கலையா?

stella / 9 months ago

Advertisement

Listen News!


 ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபல்யமானவர் தான் மன்சூர் அலிகான். தன்னுடைய வித்தியாசமான பாடி லேங்குவேஜால் அனைவரையும் மிரள வைத்த இவர் சமீபகாலமாக காமெடி வேடங்களிலும் நடித்து வருகின்றார்.

இடையிலேயே பட வாய்ப்புகள் குறையத் தொடங்க கொஞ்ச நாள் சினிமா பக்கமே ஆளே காணாமல் போயிருந்தார். சினிமாவையும் தாண்டி சமூக நலனில் அக்கறை கொண்டவராகவே இருந்து வருகிறார்.  பல போராட்டங்களை செய்து அவ்வப்போது சிறைச்சாலைக்கும் சென்றிருக்கிறாராம்.


இப்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் நேற்று ஒரு தனியார் யூடியூப் சேனல் ஒன்று அவரைப் பேட்டி எடுப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தது. அப்போது அவருடைய வீட்டிற்குள் மரம் இருப்பதைப் பார்த்திருக்கின்றார்கள்.

இது குறித்து  அவரிடம் கேட்ட போது ஒரு மரம் இல்லை, வீட்டுக்குள்ளே 6மரம் இருக்கு என்று சொல்லியுள்ளார். மேலும் பாத்ரூம் அறையை திறந்து காண்பித்து உள்ளே இருக்கிற பெரிய பனைமரத்தை காட்டினார். அதை பார்த்ததும் நிரூபர் அசந்து போய்விட சமையலறையில் இரண்டு  மரங்களை வைத்திருக்கிறாராம்.


மரங்களை வெட்டுவது என்பது  மன்சூர் அலிகானுக்கு பிடிக்காதாம். அதன் காரணமாகவே வீட்டில் 6 மரங்களை வளர்த்து அதனுடனேயே இருந்து வருகிறேன் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement