• May 05 2024

“என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட மணிரத்னம்..” மனம் நொந்து பேசிய சரத்குமார் !

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  அதிரடி ஆக்ஷன் ஹீரோவான சரத்குமார், சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும்  அந்த வகையில் சரத்குமார் நடித்த, காஞ்சனா 2, சென்னையில் ஒரு நாள், வாரிசு, மற்றும் 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் மணிரத்னம் தன்னிடம், பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங்கின் போது... கேட்ட அந்த ஒரு கேள்வி, மிகவும் வருத்தமடைய வைத்ததாக தெரிவித்துள்ளார்.

சரத்குமார். 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, இயக்குநர் மணிரத்னம் சரத்குமாரை பார்த்து உங்களுக்கு ரொமான்ஸ் வருமா என கேட்டாராம். இதனை இன்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், 'இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை பார்த்து, மணிரத்னம் அப்படி கேட்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2' படத்தில், நடிகர் சரத்குமார், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு நந்தினியின் கணவர் இவர் என்பதும் குறிப்பிடதக்கது. சோழ வம்சத்தை சேர்ந்தவர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காக, நந்தினி இவரை திருமணம் செய்து கொண்டு, அவரை எப்படி ஆட்டி வைக்கிறார் என்பதை முதல் பாகத்திலேயே பார்த்திருக்க முடியும். 

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த மாதம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement