• May 05 2024

மணிரத்னம் குடும்பத்தில் இருந்து சினிமாவில் என்ட்ரீ கொடுத்துள்ள முக்கிய நபர்..! யாருன்னு பாருங்க..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம் என்றும் சொல்லலாம் அவ்வளவு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார் இவர்…

அதனை போல இவர் இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் வெளிவந்தது…இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைய இரண்டாவது பாகம் சற்று சொதப்பியது என்றும் சொல்லலாம் வசூலிலும் சரி விமர்சனத்திலும் சரி சற்று தோய்வு ஏற்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் கமலின் 234வது படத்தை இயக்கவுள்ளார்…இயக்குநர் மணிரத்னம் நடிகை சுஹாசினியை காதலித்த கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் காதல் காதல் கதை அந்த காலத்தில் டாப் நியூஸாக பேசப்பட்டது..இவர்களுக்கு நந்தன் மணிரத்னம் எனும் மகன் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சுஹாசினி தனது மகன் நந்தன் மணிரத்தனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது…இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மணி ரத்னம் குடும்பத்தில் இருந்து அடுத்து வரும் தமிழ் ஹீரோ ரெடி என கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை போல் மணிரத்னம் மகன் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளாராம்,ஆனால் ஹீரோவாக இல்லை லைக்கா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை மணிரத்னம் மகன் நந்தன் தான் கவனித்து வருகிறாராம் லண்டனில் இருந்தார் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது இந்த செய்தி வந்துள்ளது. 

லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு கூட நந்தன் தான் தீர்வு கொடுத்தார் என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதனால் விரைவில் தயாரிப்பாளர் பெயர் வரலாம் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement