• May 04 2024

ஆண்டவரால் காப்பாற்றப்பட்ட ஆண் போட்டியாளர்! சவாலில் தோல்வியடைந்த மாயா! கமல் சேர் என்ன கேட்டார் தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

இரண்டு வாரத்தை கடந்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி ஞாயிறு கமல் தொகுத்து வழங்குவதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பஞ்சாயத்து காரர்களாகவே இருக்கின்றார்கள். அதிலும் மாயா ஒரு ஏஜென்ட் கேங்கை உருவாக்கி பிக்பாஸ் போட்டியாளர்களை எந்த அளவிற்கு டாச்சர் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி செய்து விட்டார் இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


 பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். பின்பு பவா செல்லத்துரை தானாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.  இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.


பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வித்தியாசமான குணத்துடன் இருப்தனால் அவரை அதிக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை, அவரை மாயாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் ஒரு நேரத்தில் பிரதீப்பிற்கு மட்டும் ஜனங்கள் கைத்தட்டினால் என்று மாயா சவால் விட்டிருந்தார்.


இந்நிலையில் இன்றைய தினம் வெளிவந்த ப்ரேமோவில் ஆண்டவர் பிரதீப் காப்பாற்றப்பட்டுவிட்டார் என சொல்கின்றார். அதனைக் கேட்டு மக்கள் அனைவரும் கை தட்டுகின்றனர். அப்போது கமல் மயா அன்றொரு நாள் சவால் விட்டீர்களே என மாயவை கேட்கின்றார். இது தான் மூன்றாவது ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது.

https://youtu.be/bGbIIWaH0NA?si=yhRNXOwrQ3Tm5NSg

Advertisement

Advertisement

Advertisement