• Jul 27 2024

ஓவர் பர்பாமன்ஸில் முத்துவை மாட்டிவிட்ட மலேசியா மாமா! ரோகிணியின் அடுத்த ட்ராமா ரெடி? ஒன்ஸ்மோர் சரக்கு கேட்ட மனோஜ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. 

அதில், மனோஜை பிடித்துக்கொண்டு முத்து வீட்டிற்குள்ளே வர, விஜயாவும் ரோகிணியும் பதறிப்போய் என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசாமல் இருக்கீங்க? என்று கேட்க, ரவி அதற்கு, இவன் குடிச்சி இருக்கான் என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து மனோஜ்க்கு முத்து தான் குடிக்க வைத்திருப்பான் என்று விஜயா தவறாக புரிந்து கொண்டு முத்துவைத் திட்ட, நான் ஒன்னும் பண்ணல என்று முத்து சொல்ல,  குடிக்க போனால் நீங்கள் மட்டும் குடிக்க வேண்டியதுதானே என்று ரோகினியும் கோபப்படுகிறார்.

மேலும் மலேசியா மாமா குடிச்சி இருப்பது தெரிந்து அங்கேயும் போய் சத்தம் போடுகிறார். அங்கு போன ரோகிணி, மலேசியா மாமாவிடம் மனோஜ் எதுக்கு குடிக்க வச்சீங்க? என்று கேட்க, நானும் வேணாமுன்னு தான் சொன்னேன் முத்தும் அவருடைய பிரண்ட்ஸும் தான் சேர்ந்து மாப்பிள்ளைக்கு ஊத்தி  விட்டாங்க என்று அப்படியே பிளேட்டை திருப்பி போடுகிறார் மலேசியா மாமா.


அண்ணாமலை இதெல்லாம் பார்த்தா மனசு கஷ்டப்பட மாட்டானா? அவன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? என்று பாட்டியும் கோபப்படுகிறார். இதன் போது செல்வம் உண்மையை சொல்ல வர, முத்து வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.

ரோகிணி மனோஜ் ஹாஸ்பிடலுக்கு கூட்டி போலாம் என்று சொல்ல, இப்ப என்ன அவன பேச வைக்கணும் அவள தானே என்று சொல்லி, முத்து மனோஜ்க்கு மோர் கொடுக்க, அதைக் குடித்த மனோஜ் மோர்ல உப்பு கம்மியா இருக்கு என்று பேசத் தொடங்குகிறார்.

விஜயாவை பார்த்து மாமா நீ மட்டும் தான் என் மேல பாசமாய் இருக்கா என்று ஓடிப்போய் கட்டி பிடிக்க, நாத்தம் தாங்க முடியாமல் விஜயா அவரை தள்ளி விடுகிறார். 

பிறகு ரவியை பார்த்து, என் தம்பி கல்யாணத்துக்கு என்ன  கூப்பிடாம விட்டுட்டியேடா என்று புலம்புகிறார் மனோஜ். மேலும் பாட்டியை பிடித்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அளப்பறை செய்ய, அங்கு ரோகிணியை கண்டதும் காலில் விழுந்து கதறுகிறார். நான் சீக்கிரம் ஏதாச்சும் வேலைக்கு போவேன் என விட்டு போயிடாத என புலம்புகிறார்.

பின்பு செல்வமும் முத்தும் பின்பக்கம் நின்று கொண்டு,  எனக்கு என்னமோ இந்த மலேசியா மாமா மேல இன்னும் சந்தேகம் அதிகமா இருக்கு. இந்தப் பாலரம்மா என்னமோ ட்ராமா போடுது. மலேசியா மாமா இன்னைக்கு தப்பிச்சிட்டாரு நாளைக்கு பொறி வச்சு பிடிக்கிறேன் என்று பேசிக் கொண்டிருப்பதை ரோகிணி கேட்கிறார்.

இதைக் கேட்டு ரூமுக்கு வந்த ரோகினி, மனோஜை எதுக்கு குடிக்க வச்சீங்க என்று மலேசியா மாமா  தலையில் கொட்டி திட்டுகிறார். நீ பண்ணினது எல்லாம் போதும் நாளைக்கு காலையில உங்களுக்கு ஒரு போன் வரும். உங்க பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று நீங்கள் கிளம்பிட்டு போயிட்டே இருக்கணும் என்று சொல்ல,

என்னம்மா நீ அடிக்கடி கதையில டுவிஸ்ட் கொடுக்கிற, நீயே ஒரு கதையை எழுதி மணிரத்தினம் சார் கிட்ட கொடுத்திடு என சொல்கிறார் மலேசியா மாமா. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Advertisement

Advertisement