• May 02 2024

தரையில் குப்புறப் படுத்து புகைப்படம் வெளியிட்ட மாளவிகா…என்னாச்சு என்ற கேள்வியுடன் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக முன்னேறி வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் தனுஷின் ‘மாறன்’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவ்வாறாக பல படங்களின் ஊடாக தனது திறமையான நடிப்பினையும், நடனத்தையும் வெளிப்படுத்தி வந்த நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இவர் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அதனை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றுவது வழமை.

தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருப்பார். இதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவரது இன்ஸ்டா பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் வித்தியாசமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி உள்ளனர்.

அதாவது அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து மிகவும் சோர்வாகி தரையில் குப்புற படுத்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அத்தோடு இணைத்து அப்புகைப்படத்திற்கு கீழே "உங்களை உங்கள் ட்ரெயினர் வலிமையாக்குவதாக கூறி மறைமுகமாக உங்களை கொல்ல முயற்சிக்கிறார்" என்றும் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

அப்புகைப்படத்தையும், பதிவினையும் பார்த்த மாளவிகாவின் ரசிகர்கள் பதறியடித்து "உங்களுக்கு என்ன ஆச்சு?" என்ற கேள்வியினை கேட்டு வருகின்றார்கள். அதுமட்டுமன்றி அந்த புகைப்படத்தை தமது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement