• May 03 2024

திருமணத்திற்குப் பின்னர்... அந்த விஷயத்தில் அதிக நேரம் செலவிடும் மஹாலட்சுமி... எல்லாமே பணத்திற்காகவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை நடிகைகள் எப்படி இலகுவில் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து விடுவார்களோ அந்தளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் பிரபல்யமடைந்து விடுவார்கள். அந்தவகையில் சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ஒருவரே நடிகை மகாலட்சுமி.


இவர் பல காலமாக தனது முதல் கணவரை விவாகரத்து சென்று தன் மகனுடன் தனிமையில் இருந்து வந்தார். இருப்பினும் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இணையத்தில் பரபரப்பாக கடுமையாக விமர்சனம் செய்து பேசப்பட்டதை கண்டுக்கொள்ளாமல் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வருகின்றனர்.


அதாவது தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தும் வகையில் மகாலட்சுமி சீரியலிலும் ரவீந்தர் தயாரிப்பு, பிக்பாஸ் விமர்சனம் என்று தத்தமது வேலையை செய்து வருகிறார்கள். அத்தோடு சீரியலை தவிர காசு சம்பாதிக்க மகாலட்சுமி விளம்பரம் பல செய்தும் வருகிறார். 

ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர் விளம்பரம் குறைந்த அளவில் தான் செய்து வந்துள்ளார். பின்பு ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதன் பிற்பாடு கேக் முதல் ஆடை அணிகலன் என பல விளம்பரங்கள் வந்து குவியத் தொடங்கி விட்டன.


மேலும் திருமணத்திற்கு முன் மாதம் வருமானம் 2 முதல் 3 லட்சமாக இருந்த மகாலட்சுமிக்கு தற்போது மாதம் 4 லட்சம் வரை விளம்பரம் , சீரியல் உட்பட வருமானம் வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போதும் சில பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை இட்டுள்ளார். இவ்வாறாக இவர் விளம்பரத்தில் அதிகளவிலான நேரத்தை செலவிட்டு வருவதால் எல்லாமே காசுக்காக தானே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement