• Apr 26 2024

30 வயது இளைஞருடன் காதல்: சர்ச்சையில் சிக்கிய கமலின் மாஜி மனைவி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி நடிகை சரிகா. இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்சஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கமலும், சரிகாவும் கருத்து வேறுபாடு காரணமாக பல காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நடிகை சரிகா, தான் லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனை நடிகை சரிகா இருவரும் காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தனர். இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்தார் சரிகா. அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் சரிகா நடிப்பில் வெளியாகியுள்ள ஆந்தாலாஜி படம் தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அமேசான் பிரைமில் நேற்று வெளியான ஆந்தாலஜி படம் ’மாடர்ன் லவ் மும்பை’. மேலும் இதில் 6 குறும்படங்கள் இருக்கிறது. ஆறு கதைகளுமே விவகாரமான காதல் கதைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு குறும்படத்தில் நடித்துள்ள சரிகா 30 வயதான இளைஞர் ஒருவர் காதலிப்பது போல் உள்ளது. இதனை அறிந்ததும் அந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு சரிகா கண்டிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அந்த இளைஞரை ஏக்கத்துடன் சரிகா பார்ப்பது போன்றும் கதை முடிவடைந்துள்ளது. 60 வயதுள்ளவர் 30 வயது இளைஞரை காதலிப்பதை போன்று கதையமைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஆனால் இந்த கதைகள் விவகாரமாக இருந்தாலும் ஒரு காட்சியில்கூட விரசமில்லாமல் டீசண்டாக படமாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்தோடு சரிகாவின் போஷனும் காதலுக்கு வயது தடையில்லை என்பதையும், எந்த வயதிலும் துணை தேவை என்பதையும் காட்டுவதாகவே அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பின்னர் சரிகா திரையில் தோன்றியுள்ளதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement