• May 06 2024

எதுக்கு வந்திருக்கின்றோமோ அதைப் பற்றி மட்டும் பேசுவோம் மற்றதெல்லாம் தேவையில்லாத ஆணி- பத்திரிகையாளரிடம் கோபப்பட்ட சித்தார்த்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் இயக்குநர் சித்தார்த்.இவர் பாய்ஸ் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றார். இவர் இறுதியாக டக்கர் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்த வருகின்றார்.சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் டுவிட் போட்டு கண்டனம் தெரிவித்து வருபவர்.


இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் நிகழவொன்று நடந்தது. இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சித்தார்த்திடம் இந்தியாவின் பெயர் பார்த் என்று மாற்றப்படலாம் என வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த சித்தார்த், நாம் எல்லோருமே இந்தியாவில் சென்னையில்தான் கூடியிருக்கிறோம். இப்போது இங்கு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சி பற்றி மட்டும் பேசுவோம். இங்கே வந்துகொண்டு எந்த பெயர் யார் வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி. அதனால் எதற்காக வந்திருக்கிறோமோ அதைப் பற்றி மட்டும் பேசுவோம்" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்த்க்கது.


Advertisement

Advertisement

Advertisement