• Sep 08 2024

கேபிஒய் ஸ்ரீரஞ்சனியை ஞாபகம் இருக்குதா? யாரும் எதிர்பார்க்காத பெரிய பதவி..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரிந்த ஸ்ரீரஞ்சனியை யாரும் அவ்வளவு லேசில் மறைந்து இருக்க முடியாது. ஆரம்பத்தில் ரேடியோ ஆர்ஜேவாக இருந்த ஸ்ரீரஞ்சனி அதன்பின் படிப்படியாக ஊடகத்துறையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

  தனது சக தொலைக்காட்சி நடிகரான அமித் பார்கவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீரஞ்சனி  திருமணத்திற்கு பின்னரும் ஊடகத்துறையில் பிஸியாக இருந்த நிலையில் தற்போது அவர் தந்தி ஒன் என்ற சேனலின் தலைமை பொறுப்பு பதவியில் அமர்ந்துள்ளார்.



இந்த சேனலில் ஏற்கனவே சன் டிவி உள்பட பல டிவிகளில் ஹிட்டான தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன என்பதும் இவர் தலைமை பொறுப்பு ஏற்ற பின்னர் இந்த சேனல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீ ரஞ்சனி - அமித் பார்கவ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. அமித் பார்கவ் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஆக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சன் டிவி ஒளிபரப்பான மகாபாரதம், விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை, அச்சம் தவிர், மாப்பிள்ளை,நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களிலும் அமித் பார்கவ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஒரு பிசியான நடிகராக இருக்கும், ஸ்ரீரஞ்சனியும் ஒரு சேனலின் தலைமை பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement