• May 19 2024

தலை தூக்கிய அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சினை... தலை தெறிக்க ஓடிய கிரண்... கசப்பான அனுபவங்களை பகிர்ந்த நடிகை..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திருமலை, நியூ, வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கிரண். இவ்வாறு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் விஷாலின் ஆம்பள படத்திற்கு பிறகு திடீரென சினிமாவை விட்டே விலகியது ரசிகர்களை அப்செட் ஆக்கியது.


இதனையடுத்து சீனியர் நடிகையாக இன்னொரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வேறு விதமான போட்டோக்களை போட்டு ஓவர் கவர்ச்சி காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கிரண்.

அதுமட்டுமல்லாது சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-7 நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். ஆனாலும் குறைந்தளவு வாக்குகள் பெற்று முதல் வாரத்திலேயே கிரண் வெளியேற்றப்பட்டார்.


இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிரண் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான பின்னர் இந்திக்கு சென்றேன். அங்கு எதிர்பார்த்தளவு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆகி விட்டேன்" என்றார்.

மேலும் "சினிமாவில் நான் நிறைய கசப்பான அனுபவங்களை சந்தித்து இருக்கின்றேன், பட வாய்ப்புக்காக என்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தனர். இதனால் மன அழுத்ததிற்கு உள்ளாகி இருக்கின்றேன். அதாவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டதும் உடனே தங்களுடைய சுயரூபத்தை காட்டுவார்கள். இன்று இரவு வருகிறாயா, இல்லையா? என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் கேட்பார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு "இதன் காரணமாக ஒப்பந்தமான படத்தில் இருந்து வெளியே வந்து விடுவேன். நடிப்பை விட்டு வேறு வியாபார நடவடிக்கையில் ஈடுபடக்கூட நினைத்தேன்" எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது நான்கு வருடங்களாக கிரண் ஒருவரைக் காதலித்ததாகவும் ஆனால் அவர் நல்லவர் இல்லை என்பதால் பிரேக் அப் செய்து விட்டதாகவும், திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் கிரண் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement