இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமாக நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சியானது ரசிகர்களின் ஆரவாரத்தோடு தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் திரையிடப்பட்டது.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்திருந்தனர்.
இப்படத்தினைப் பார்த்த பலரும் பாசிடிவ் விமர்சனங்களைக் கூறி வரும் நிலையில் பிரபல இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் ஒரு பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார்.
அதில், " #PS1 மயக்கும்.... மனதைக் கவரும்..... தலைசிறந்த படைப்பு!!!! இந்திய சினிமாவிற்கு மகுடம் 👑👑👑 கிங் மணி ரத்னம் சார் & குழுவினருக்கு வணக்கம்.. 🙏🏼🙏🏼🙏🏼" என டுவிட் செய்துள்ளார்.அத்தோடு படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.
மேலும் இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!