தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்தில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிதத முன்னணி நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் ,தெலுங்கு மொழிகளில் நடித்து வருகின்றார் நேற்றைய தினம் தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார்.
இவருக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர் என்பதும் முக்கியமாகும். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் வேற லெவலில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இவருக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் சுப்புலட்சுமியாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷையே அணுகியுள்ளார்களாம். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்காததால் இந்த படம் தொடங்கப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!