• May 12 2024

அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் போட்ட கட்டளை- இப்டித் தான் தாலியும் கட்டினாரா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் அண்மையில் ஒரு கியூட்டான ஜோடியி திருமணம் நடந்தது, பின் கொஞ்சம் பிரச்சனையும் நடந்தது. வேறு எந்த ஜோடியும் இல்லை அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன்.

அசோக் செல்வன் இயக்குநர் நலன் குமாரசாமியின் சூது கவ்வும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அப்பட வெற்றியை தொடர்ந்து பீசா 2, தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய படங்களில் நடித்தார்.


ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் தற்போது அசோக் செல்வன் நடித்து வருகின்றார். இதில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்கின்றார்.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் நடந்தது.இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இருவரும் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தனர்.கீர்த்தி பாண்டியன் பேசும்போது, எனக்கு தாலி கட்டும்போது 3 முடிச்சியும் நீயே போட வேண்டும் என்று அசோக் செல்வனிடம் நான் கட்டளை போட்டிருந்தேன்.அதேபோல் தான் அவரே எனக்கு 3 முடிச்சு போட்டார், தமிழ் மரபு முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது என கூறியுள்ளார்.  



Advertisement

Advertisement

Advertisement