• May 03 2024

திடீரென கதறிகதறி அழுத கதிரவன்- உண்மையை சொன்ன விக்ரமன்... பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சர்ச்சை

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் சொர்க்கவாசிகள், - நரகவாசிகள் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 11 போட்டியாளர்களும் இரண்டு அணிகளாக விளையாடினர். இதனடிப்படையில் இந்த வாரம் யார் சிறப்பாக விளையாடினார்கள், யார் சரியாக விளையாடவில்லை என்ற தீர்ப்புகளை ஹவுஸ்மேட்ஸ்களே வழங்கவுள்ளனர்.

அந்த வகையில் 68ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அதாவது ஏடிகேவிற்கு நடந்ததை நினைத்து கதிரவன் தேம்பித் தேம்பி அழுகின்றார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் சமாதானப்படுத்துகின்றனர். இதன் பின்னர் விக்ரமனும் ஜனனியும் சோகமாக அமர்ந்திருக்கின்றனர் நரகவாசிகளான அவர்கள் இருவரும் சொர்க்கத்துக்குள் வரவேண்டும் என்பதே டாஸ்க் என தெரிகிறது. ஆனால், அவர்கள் இருவரில் யார் முதலில் உள்ளே வந்தார்கள் என்பது சர்ச்சையாகியாகியது


 குகை வழியாக விக்ரமன், ஜனனி இருவரும் ஒரே நேரத்தில் சொர்க்கத்திற்கு உள்ளே வர முயன்றுள்ளனர். அதில், யார் முதலில் சொர்க்கம் உள்ளே கை வைத்தது என்ற கேள்வி வரும் போது, விக்ரமன் நான் தான் என வாதிடுகிறார். ஆனால், தனலட்சுமியோ குகை உள்ளே விக்ரமன் முதலில் சென்றாலும், ஜனனி தான் கை வைத்ததாக கூறுகிறார். இதனால் விக்ரமனுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் உருவாக, விக்ர்மன் அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறார்.


இதனைத் தொடர்ந்து ஏனைய ஹவுஸ்மேட்ஸ்களும் ஜனனிக்கு ஆதரவாகப் பேி நாமினேஷன் ப்ரீ ஷோனுக்கு அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து இந்த நாமினேஷன் ப்ரீ ஷோனுக்கு ஏடிகே மணிகண்டன் அமுதவாணன் ஆகியோர் தேர்வாகினார்கள். இதனால் கடுப்பான தனலட்சுமி அசீமிடம் நியாயம் கேட்கின்றார்.தொடர்ந்து காமெரா முன்னாடி சென்றும் இங்னே குரூப்பிஸம் இருப்பதாகப் புலம்புகின்றார். இதன் பின்னர் யாரால் பிக்பாஸ் டி ஆர் பி அதிகமாகி இருக்கும் என்று கேட்ட போது பெரும்பாலானோர் அசீமைத் தேர்வு செய்கின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement