• May 19 2024

முல்லைக்கு வளைகாப்பு பண்ண வேண்டாம் என சொன்ன கதிர் -மூர்த்தி எடுத்த முடிவு- ஜீவாவை திட்டிய மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய எப்பிஷோட்டில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவா முல்லையில் வளைகாப்புக்கு வரமாட்டேன் என்று சொன்னதால் வீட்டுக்கு வரும் கதிர் வளைகாப்பை சின்னதாக பண்ணலாம் ஜீவா அண்ணா வர மாட்டேன் என்று சொல்கிறார் என சொல்ல கோபமடைந்த மூர்த்தி அவன் ஏதோ மனக் கஷ்டத்தால வீட்டை விட்டு போகல ஏதோ பிளான் பண்ணித் தான் போயிருக்கிறான். அவன் வந்தால் என்ன வராவிட்டால் என வளைகாப்பு கட்டாயம் நடக்கும் என்று கூறினார்.


அத்தோடு தனமும் முல்லையின் அப்பா அம்மாவும் வளைகாப்பை பெரிதாகவே பண்ணி விடலாம் என்று சொல்கின்றார். இதனால் விடிந்ததும் தனம் ஜீவாவின் வீட்டிற்குச் சென்று முல்லையின் வளைகாப்புக்கு ஜீவாவை வரும் படியாக அழைக்கின்றார். ஆனால் ஜீவா வரமாட்டேன் என மறுத்து விட மீனாவின் அப்பா பிரிந்த குடும்பம் பிரிந்தது தான் என சவால் விடுகின்றார்.


இதனால் தனம் பார்த்துக்கலாம் கண்டிப்பா ஜீவா ஒரு நாள் வீட்டுக்கு வருவான் என சபதம் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றார்.தொடர்ந்து ஜீவாவிடம் மீனா நாம வளைகாப்புக்கு போறதா இல்லையா என்று கேட்க ஜீவா போக வேணாம் என்று சொல்ல மீனா அட்வைஸ்ட் பண்ணுகின்றார். இடையில் மீனாவின் பெற்றோர் மீனாவை திட்டுகின்றனர். இருந்தாலும் மீனா வளைகாப்புக்கு போக வேண்டும் என்று சொல்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement