• May 03 2024

தமிழின் வீட்டுக்கு போக மறுப்புத் தெரிவித்த கோதை- கதறி அழும் கார்த்திக்- தமிழ் எடுத்த முடிவு-Thamizhum Saraswathiyum Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் .அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை குடும்பம் கோயிலில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த தமிழ் , எதுக்கு இப்போ எல்லோரும் கோயில்ல இருக்கிறீங்க நான் என்ன செத்தா போய்ட்டன் எல்லோரும் வாங்க வீட்டை போகலாம் என்னோட நினைப்பு இல்லையா உங்களுக்கு வாங்க வீட்ட போகலாம் என்கின்றார்.அப்போது கார்த்தி இல்லடா நாங்க ஹொட்டல்ல தங்குகின்றோம் என்று சொல்ல தமிழ் இதெல்லாம் வேணாம் வீட்டை வா என்கின்றார்.


தொடர்ந்து எல்லோரும் எழும்பி தமிழுடன் போக கோதை மட்டும் எழும்பாமல் இருக்கின்றார். அப்போது நடேசன் சென்று வரும் படி அழைக்க கோதை என்னை மாதிரி மோசமான அம்மாவா யாரும் இருக்கக்கூடாது. என் பையனுக்கு எவ்வளவு பெரய துரோகத்தை பண்ணியிருக்கிறேன் என்று அழ நடேசன் சமாதானப்படுத்துவதோடு இனிமேலாவது நம்ம பையன் சொல்லுறதைக் கேட்போம் வா அவன் வீட்டுக்கு போகலாம் என்று அழைக்கின்றார்.

இதனால் கோதையும் எழுந்து தமிழுடன் போகின்றார். மறுபுறம் தமிழ் வந்து அடித்திட்டு போனதால் அர்ஜுனின் அம்மா அவருக்கு கையில் ஒத்தனம் கொடுக்கின்றார். அப்போது அர்ஜுனின் மாமா வந்து தமிழ் வீட்டில் கோதை குடும்பம் தங்கியிருக்கும் விஷயத்தைச் சொல்ல, அர்ஜுன் நல்லவன் போல அத்தையாக்கள் பாதுகாப்பாக இருக்கிறாங்களே அதுவே போதும் என்று ராகினி முன்னாடி நடிக்கின்றார்.


பின்னர் ராகினி போனதும் அர்ஜுனின் மொத்தக் குடும்பமும் சேர்ந்து சிரிக்கின்றனர். பின்னர் தமிழ் வசுவின் குழந்தைக்காக தொட்டில் கட்டுகின்றார். எல்லோருக்கும் ட்ரெஸ் வாங்கிட்டு வருவதாகவும் போகின்றார். இப்படி கிளம்ப முதல் தமிழ் கோதையைப் பார்க்கின்றார். இருவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். 


தொடர்ந்து கார்த்திக் தன்னால் தான் இப்பிடி ஆச்சு என்று அழ வசு சமாதானப்படுத்துகின்றார். அப்போது வசுவின் குழந்தை அழ கோதை எழும்பி தொட்டிலை ஆட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement