• May 03 2024

சம்பள விஷயத்தில் குடும்பத்தை ஏமாற்றிய கண்ணன்- ஜீவாவை கைக்கூலியாக பயன்படுத்தும் மூர்த்தி- அதிர்ச்சியில் மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். மீனா தன்னுடைய அப்பாவைப் பார்த்து விட்டு மீண்டுமு் திரும்பி வீட்டுக்கு வருகின்றார். அவரைப் பார்த்ததும் அனைவரும் மீனாவின் அப்பாவைப் பற்றி கேட்கின்றனர்.

அதற்கு மீனாவும் அப்பாவுக்கு காலில் தான் அடிபட்டிருக்கு தங்கச்சிட கல்யாண வேலைய யார் பார்ப்பாங்க என்று தான் அவரோட கவலை. இதுவே நான் ஆண் பிள்ளையாக இருந்திருந்தால் கூட நின்னிருப்பேன். பொண்ணுங்களால என்ன பண்ண முடியும் என்று புலம்புகின்றார். தொடர்ந்து விடிந்ததும் மூர்த்தியும் ஜீவாவும் பேசிக்கிட்டிருக்கும் போது மீனாவின் அப்பா போன் செய்து மீனாவையும் ஜீவாவையும் அனுப்பி வையுங்க கல்யாணப் பத்திரிகை அனுப்பி வைக்கணும் என்று கூறுகின்றார்.


இதற்கு மூர்த்தியும் கடையில கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சோன அனுப்பி வைக்கிறேன் என்று ஜீவாவைக் கடைக்கு கூட்டிக் கொண்டு போகின்றார். பின்னர். நீண்ட நேரமாகியும் ஜீவா பத்திரிகை வைக்க போகாததால் மீனாவின் தங்கை போன் பண்ணி எப்போ வருவீங்க என்று கேட்கிறார்.அதற்கு ஜீவா கடையில கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சோன வருகிறேன் என்று சொல்லிட்டு வைக்கிறார்.


தொடர்ந்து மீனா முல்லை ஐஸ்வர்யா ஆகயோர் சமைப்பதற்காக கீரை ஆய்ந்து கொண்டிருக்கும் போது முல்லை ஐஸ்வர்யாவிடம் கண்ணன் சம்பளம் வாங்கினதுக்கு ரீட் தரணும் என்று கேட்க ஐஸ்வர்யா சம்பளத்தில் பாதிக் காசு பிடித்து வைத்திரு்கின்றேன். அதில தாறேன் என்று சொல்ல மீனாவும் முல்லையும் அதிர்ச்சியடைகின்றனர். மேலும் அப்போ முழு சம்பளத்தையும் கொடுக்கலையா என்று கேட்க ஐஸ்வர்யா ஏன் கொடுக்கணும் என்று கேட்கிறார்.இதனால் மீனாவும் ஐஸ்வர்யாவும் யோசிக்கின்றனர்  இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement