• May 11 2024

முல்லையின் வளைகாப்புக்கு கட்டாயம் போக வேண்டும் என அடம்பிடித்த மீனா- ஐஸ்வர்யாவால் குழப்பத்தில் இருக்கும் கண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவா மீனாவிடம் முல்லையின் வளைகாப்புக்கு போக வேண்டும் என அடம்பிடிக்கின்றார். இருப்பினும் ஜீவா அங்க எல்லாம் போக முடியாது என சொல்லி விட்டு கிளம்புகின்றார். இதனால் மீனாவின் அம்மா அப்பா மீனாவைத் திட்டுகின்றனர். தொடர்ந்து ஐஸ்வர்யாவும் கண்ணனும் ஷொப்பிங் பண்ணியது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.


அந்த நேரத்தில் ஐஸ்வர்யா கண்ணனை சமாளிக்கின்றார். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாத் தானே கட்டப்போறோம்.உன்னை உங்க வீட்டில மிடில் கிளாஸ் பையனாகவே வளர்த்திட்டாங்க.அதனால தான் நீ செலவு செய்ய பயப்பிடுறாய். உன்னை மாத்திக் காட்டுறேன் பார் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் கதிர் தனியா யோசிச்சுக் கொண்டிருக்கும் போது முல்லை சென்று சமாதானப்படுத்துகின்றார்.அத்தோடு ஜீவா அண்ணாவுக்கு நாம இப்போ வேண்டாதவங்கள போய்ட்டோமா என நினைத்து கவலையடைகின்றார். பின்னஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று ஜீவாவிடம் வளைகாப்புக்கு வரும் படி அழைக்கிறார்.இருந்தாலும் ஜீவா முகத்தைத் திருப்பிக் கொண்டு போகின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

































Advertisement

Advertisement

Advertisement