• May 18 2024

கோபியின் கார் பாக்கியா வீட்டில் நிற்பதைப் பார்த்த ராதிகா- வீட்டை விட்டு வௌியே போக முடிவெடுத்த பாக்கியா- அதிர்ச்சியில் ஈஸ்வரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றார்.அப்போது எழில் செழியன் எதுக்காக அவரைக் கூட்டிட்டு வந்தான் என திட்ட ஜெனி நடந்த விஷயத்தைக் கூறுகின்றார். தொடர்ந்து அங்கு வரும் ராமமூர்த்தி பக்கியாவை ஆறுதல்படுத்துகின்றார். எந்த சூழ்நிலையிலும் உன்னோட தான் நாங்க இருப்போம் எனக் கூறுகின்றார்.


தொடர்ந்து ராதிகா துாங்காமல் விடிய விடிய கோபிக்காக காத்திருக்கின்றார். இதனால் ராதிகாவின் அம்மா சமாதானப்படுத்துகின்றார். அவர் எங்கையாவது ப்ரண்ட் வீட்டில துாங்கியிருப்பாரு எனச் சொல்கின்றார். தொடர்ந்து காலை ஆனதும் ராதிகா வீதியில் சென்று கோபி வருகின்றாரா எனப் பார்க்கிறார்.

அந்த நேரம் கோபியின் கார் பாக்கியா வீட்டில் நிற்பதைப் பார்த்து விட்டு அப்போ கோபி பாக்கியா வீட்டில தான் இருக்காரா என அறிந்து கொண்டு தனது அம்மாவிடம் போய் சொல்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த அவரது அம்மா இதுக்கெல்லாம் ஒரு முடிவு எடுக்கிறேன் என சொல்கின்றார்.


பின்னர் எழில் ஈஸ்வரியிடம் எதுக்கு அவரை இன்னும் வச்சிருக்கிறீங்க அனுப்ப வேண்டியது தானே  என சொல்ல ஈஸ்வரி அவன் இங்க தான் இருப்பான். இது அவனோட வீடு என் பையன் எங்கையும் போகமாட்டான் இங்க தான் இருப்பான் எனக் கூறுகின்றார். தொடர்ந்து  எழில் திருமணம் செய்த விடயத்தையும் குத்திக் காட்டிப் பேசுகின்றார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா அங்கு வந்து நான் என்ன அத்தை பண்ணணும் உங்க பையன் நான் இங்கு இருந்தால் நான் வீட்டை விட்டு போகவா எனக் கேட்கிறார். இத்துடன் எந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement