• May 05 2024

நடிகர் நாகேஷை தலையணையால் அமுக்கி கொலை செய்ய நினைத்த கமல்- இது எப்போ நடந்திச்சு தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் நாகேஷ். இவர் இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் உருவான "சர்வர் சுந்தரம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினர். அதன்பிறகு பல படங்களில் நடிக்க தொடங்கிய நாகேஷ் முக்கிய நடிகராக வலம் வந்தார்.

இவர் தனது விடாமுயற்சி மட்டும் கடின உழைப்பால் திரைத்துறையின் உச்சத்திற்கு சென்றவர்.இந்த நிலையில் இவர் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு முறை, இயக்குநர் கே.பாலசந்தர் கமலை வைத்து படம் இயக்கி வந்தார். அப்போது சில காட்சிகளுக்கு 4 அல்லது 5 டேக் சென்றுள்ளார் கமல்.


 இதனால் கோபம் அடைந்த பாலசந்தர் "இதுவே என்னுடைய நாகேஷ் இருந்திருந்தால் ஒரே டேக்கில் முடித்திருப்பான்" என கமலை திட்டியுள்ளார்.ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கமல், "அந்த நாகேஷ் கையில் கிடைத்தால் தலையணை வைத்து அமுக்கி கொன்று விட வேண்டும்" என்று நினைத்து இருக்கிறார்.


அதன் பிறகு, நாகேஷுடன் கமல் இணைந்து நடிக்கும் சூழல் வந்துள்ளது. அப்போது தான் இயக்குநர் பாலசந்தர் கூறியது எவ்வளவு உண்மை என புரிந்து கொண்டார் கமல். கமலும் நாகேஷும் இணைந்து பஞ்ச தந்திரம் திரைப்படத்திலும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement

Advertisement