• May 05 2024

ஆயிஷா அழுவதே ப்ரோமோவில் வரத்தானா..? உண்மையை உடைத்த கமல்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மக்கள் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது 5 வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் சண்டைக்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமே இல்லை.

அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி அசத்தி இருந்தனர். இதில் விளையாட்டை விட சண்டைகளே அதிகமாக காணப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கமலினுடைய எபிசோட்டுக்காக காத்திருக்கின்றனர். அதற்குக் காரணமே ஒவ்வொரு விடயத்தினையும் அவர் புட்டுப் புட்டு வைப்பது தான். அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய 2ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் "இந்த வீட்டில் ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக நினைச்சு செய்றது யாரு" என்ற கேள்வியைக் கேட்கின்றார் கமல். அதற்கு மணிகண்டன், ஷிவின் ஆகியோர் தனலட்சுமியையும், அசீம் விக்ரமனையும் கூறி இருக்கின்றார்.

அதேபோன்று அமுதவாணன் ஆயிஷாவைக் கூறுகின்றார். அதாவது அவங்க நிறைய இடத்தில் அழுது இருக்காங்க என்கிறார். அதற்கு உடனே கமல் "அப்போ ஆயிஷா அழுவது ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காகவா" எனக் கேட்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement