• May 18 2024

அன்னையர் தினத்தில் ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த ஜான்வி கபூர்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

அன்னையர் தின ஸ்பெஷல் நாளான இன்று அனைவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் தாங்கள் தங்கள் அம்மாவுடன் நின்ற அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் . அந்தவகையில் ஜான்வி கபூர் தன்னுடைய அம்மா ஸ்ரீதேவியுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார் .

திரையுலகில் துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இதைத்தொடர்ந்து மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தன் நடிப்பை வெளிக்காட்டினார் .

உலகநாயகன் கமல் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் போன்ற முக்கிய தமிழ் சினிமா பிரபலங்களோடு ஜோடி சேர்ந்து இந்தியத்திரைப்படத்துறையில் புகழ் பெற்ற நடிகை ஆனார் . சுமார் 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாத்துறையை கலக்கியவர் .

போலிவுட் இன் தாயாரிப்பாளரான காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2018 இல் துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் .

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

இந்நிலையில் தன்னுடைய அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ,அவர் நீ என்னுடன் இல்லாத சமயத்திலும், உன் அன்பை நான் தினமும் உணர்கிறேன் அம்மா..! உலகின் மிக சிறந்த தாய் நீங்கள்..உங்களை நான் என்றும் காதலிக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.,

Advertisement

Advertisement