விஜய் டிவியில் வெற்றிகரமாக 5சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 6வது சீசன் இன்று ஆரம்பமாகி உள்ளது.
நேற்றிரவே போட்டியாளர்கள் 20 பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து விட்டனர். இதனிடையே அடுத்தடுத்த ப்ரமோக்களையும் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து வெளியிட்டு வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிவி செய்தி வாசிப்பாளர் மற்றும் ஆங்கர் ஜனனியும் பங்கேற்றுள்ளார்.
மேலும் இவரும் டிக்டாக் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர். இலங்கை தமிழ் மக்களையும் கவரும் வகையில் ஜனனியை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இணைத்துள்ளது விஜய் டிவி. முன்னதாக நடைபெற்ற சீசன்களில் தர்ஷன், லாஸ்லியா போன்றவர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல முதல் ஒரு வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.அதில் அவர் கூறியதாவது
அனைவருக்கும் வணக்கம் நான் பிக்பாஸ் ஷோவுக்குள்ள போகப்போறன். எனக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் எனக்கு சர்ப்போட் பண்ணுங்க. நான் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களை நம்பித்தான் இந்த ஷோவுக்குள்ள போறன். நான் கொஞ்சம் சின்ன பிள்ளை ஏதாவது தப்பு பண்ணினால் மன்னிச்சுக் கொள்ளுங்க. முடிந்தவரை உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன் என்றும் தெரிவித்து வீடியோவை பதிவு செய்துள்ளார்.
அத்தோடு இவர் இலங்கையில் இருந்து கடைசியாக ஒரு புகைப்படத்தை எடுத்து இன்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்....
Listen News!