• May 04 2024

தசரா படத்திற்காக குடித்தது உண்மை தான்- முதன்முறையாக வெளிப்படையாகப் பேசிய நடிகர் நானி- அவங்க தான் கேட்டாங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் நானி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறி உள்ளார். இவரது நடிப்பில் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றன. இதில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வசூலை அள்ளியது.

இந்த படத்தைத் தொடர்ந்து ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகி உள்ள படம் தான் தசரா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உள்ள இந்த படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பல மொழிகளில், இந்த மார்ச் மாதம் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


படம் வெளியாக ஒரு நாளே எஞ்சிஇருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்து பேட்டி அளித்த நானி, இந்த படத்தின் கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டதால், ஒகே சொல்லி விட்டேன். அதே போல இந்த படத்தில் இடம் பெற்ற வசனத்திற்காக நான் பெரியதாக சிரமப்படவில்லை எல்லாம் இயல்பாக இருந்தது.

அதே போல இந்த படத்தில் பல காட்சிகளில் ரியாலிட்டிக்காக மது அருந்தினேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தின் கண் எப்போதும் மது அருந்தியது போல சிவப்பாகவே இருக்க வேண்டும். இதற்காக தண்ணீர் அல்லது வேறு ஏதாவது குடித்தால் அந்த ரியாலிட்டி இருக்காது என்று இயக்குநர் கூறினார்.


இதனால், ஒரு சில காட்சிகளில் உண்மையான மதுவை குடிப்பது போல காட்சி வைக்கலாமா என இயக்குநர் தயக்கத்தோடு என்னிடம் கேட்டார். அவர் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். ஷாட்டுக்கு இரண்டு சிப்ஸ் அல்லது இரண்டு டம்ளர் மது அருந்தி நடித்தேன் அந்த காட்சி மிகவும் தத்ரூபமாக வந்துள்ளது. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன் என்றார்.


Advertisement

Advertisement

Advertisement